கத்திமுனையில் புகுந்து கொள்ளை

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

கத்திமுனையில் புகுந்து கொள்ளை

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் மூன்று பெண்கள் மாத்திரம் வசித்து வந்த வீட்டில் கடந்த சனிக்கிழமை (04) கொள்ளையர் குழு ஒன்று புகுந்து பல பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் கடந்த காலப்பகுதியில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில் தனது கணவனை இழந்துவிட்ட நிலையில் தனது மகளை பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் சிறீபாலன் ஜுட் கிறிஸ்ரா என்பவர் வளர்த்து வருவதோடு தனது தாயாரையும் பராமரித்து வருகின்றார் .

இவ்வாறான பிண்ணனியில் மூன்று பெண்கள் மாத்திரம் வசித்துவரும் குறித்த வீட்டின் கூரையை பிரித்து வீட்டினுள் நுழைந்த மூன்று சந்தேக நபர்கள் குறித்த வீட்டில் இருந்த தாய், மகள், தாயின் தாய் ஆகிய மூவரின் கண்கள், கைகளை கட்டிவிட்டு இவர் சேமித்த வைத்த 90,000 ரூபாவுக்கு மேற்பட்ட பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர்.

அத்தோடு மகளின் கழுத்தில் கத்தியை வைத்து மகளை கொலை செய்யப்போவதாக மிரட்டி அவர்களிடம் இருந்த சுமார் ஆறு பவுணுக்கு மேற்பட்ட நகைகளையும் கொள்ளையடித்து அவர்களின் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை இரவு 11 மணியளவில் வீட்டில் நுழைந்த குறித்த திருடர்கள் நேற்று முன் தினம் அதிகாலை 3 மணிக்கு பின்னரே வீட்டை விட்டுச் சென்றதாகவும் இவர்களை துன்புறுத்தியதாகவும் குறித்த தாய் கண்ணீருடன் தெரிவித்துள்ளார் .

முன்னைய காலத்தில் நாம் எந்த பயமும் இன்றி வாழ்ந்தோம். ஆனால் இன்று நிம்மதியாக வாழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எம்மை பொலிஸ் நிலையத்திற்கோ ஊடகங்களுக்கோ தகவல் வழங்கக்கூடாது எனவும் அதை மீறி கூறினால் மூவரையும் வந்து கொலை செய்வோம் எனவும் அவர்கள் மிரட்டி சென்றுள்ளனர் என தாய் மேலும் தெரிவித்தார் .

இது குறித்து புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கத்திமுனையில் புகுந்து கொள்ளை

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 12 - 13.03.2026

Mahanadhi - மகாநதி - 12 - 13.03.2026

Read More
Varisu - வாரிசு - 11 - 14.02.2026

Varisu - வாரிசு - 11 - 14.02.2026

Read More
Mahanadhi - மகாநதி - 09 - 11.03.2026

Mahanadhi - மகாநதி - 09 - 11.03.2026

Read More