posted 30th March 2026
இன்றைய Serial Review & Analysis ஆனது 23ஆம் திகதியிலிருந்து 26ஆம் திகதி வரை உள்ளடக்கிய Serial Review & Analysisகளைக் கொண்டது.
இந்த Serial Review & Analysisஇனி்ல் நீங்கள் பார்கப்போவது;
- ககனும் எவ்வளவு ஏமாற்றங்களைத்தான் தாங்குவான். அவனும் மனிதன்தானே! இதெற்கெல்லாம் காரணம் பூமிதான் என்று இலகுவாக சொல்ல முடியும். ஆனால், பூமியோ எல்லாரினதும் குணாதிசயங்களை விளங்கிக் கொண்டு ஒருவருக்கும் ஒரு பிரச்சனைகளும் வராமல் மெதுவாக வாழ்கையினைக் கொண்டு போகச் சிந்திக்கின்றாள் என்றாள், இது பூமியின் பிழையாக சொல்லத்தான் முடியுமா? இது ஒரு குடும்பப் பெண்ணிற்குரிய குணாதிசயமல்லவா?
- கிராமத்திலிருந்து தப்பித்து வந்த தம்பியைக் கண்ட பூமி அவனுக்கான பாதுகாப்பினை ககனின் வீட்டில் செறியின் மூலம் ஒழுங்குபடுத்தி விட்டாள்.
- நட்சத்திராவிற்கோ செறியினால் ஏற்படுத்தப்பட்ட கல்யாணமானது ஏற்றுக் கொள்ள முடியாமல், அபூர்வாவை விட கொடூரமாகச் சிந்திக்கின்றாள்.
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
Salangai Oli - சலங்கை ஒலி - 23 - 26.03.2026
பூமியின் தம்பி ஷிவாவை ஒருவாறாக செறி, பூமி கேட்டுக் கொண்டதற்கிணங்க ககனிடம் சொல்லி ககனுடைய வீட்டிற்கு அனுப்பி வைத்தான். ஏனென்றால் ஷிவாவிற்கு பாதுகாப்பான இடம் ககன் மாமாவின் வீடு மட்டும்தான் என்று பூமி நினைத்தனால்தான். அதற்காக, பூமி பொய் சொல்லித்தான் ஷிவா, ஷாரதா அத்தையின் வீட்டிற்கு அனுப்பி வைக்கப் பட்டான் என்றில்லை.
சிறு வயதிலிருந்தே ககன் அவனது தகப்பன் கிறிஷ்ணபிரஷாத் ஷாராதவின் குடும்பத்தினை அம்போ என்று விட்டு விட்டுச் சென்றதனால், பிள்ளைக்குப் பிள்ளையாகவும், ஷாரதாவிற்கு ஒரு அம்மாவாகவும், அப்பாவாகவும், பூரிக்கு அண்ணனாகவும் இருந்த இந்த பல சகாப்தங்களை காண வேண்டிய, அனுபவிக்க வேண்டிய கஷ்டங்களை எல்லாம் வெற்றியோடு தாண்டியவன்தான் இந்த ககன். அவனுக்கு ஷிவாவின் கஷ்டம் விளங்காதா என்ன?
பத்திரமாக ஷிவாவை வீட்டிற்குக் கூட்டிச் சென்று அம்மாவிற்கும், பூரிக்கும் அறிமுகப்படுத்திய ககன், ஷிவாவை ஒரு நல்ல collegeஇலும் சேர்த்து விட்டான், ஷிவா விட்டு விட்ட, இடையில் விடப்பட்ட கல்வியை தொடருவதற்கு.
தினமும், ககன் அப்பியாசம் செய்வதற்காக பூங்காவிற்குப் போவது வழக்கமாக இருந்து வந்தது. அங்கு பூமியைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலையானது ஏற்பட்டது. ககனும் கோபம் கொண்டான். எப்பவும் காணாத துரோகியாகப் பூமியை நினைத்தான். இதற்கெல்லாம் காரணம் பூமி முழுமையாக ககனிடம் விஷயங்களைச் சொல்லாமல் விட்டதுதான். இப்படியான மௌனம் எப்பவும் உறவுக்குக் கூடாதென்று இதிலிருந்து விளங்குகின்றது. எப்பவும் பூமி, தனக்கு நடந்தனவற்றினை ககன் கோபம் கொண்டாலும் சொல்லவும் வேண்டும். ஆனால், ககனுக்கோ அந்த சந்தர்ப்பம் வரவில்லை என்பதனால், இங்கு பூமிதான் பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்காகவும், ககனை மேலும், மேலும் கோபம் கொள்ளாமலும் இருப்பதற்காக நடந்தவற்றினை ஒழிக்கின்றா.
நட்சத்திராவுக்கோ தனக்கு நடந்த கல்யாணத்தினையிட்டு மிகவும் கோபம் கொண்டுள்ளா. அதுவும் செறியின் மேலே உள்ள கோபமானது, அவளது உண்மையான குணாதிசயங்களை வெளியே கொண்டு வந்து விட்டது. இவளது உண்மையான கொடூர மனத்தினையும், இனி செறியைத் தான் எவ்வாறெல்லாம் துன்புறுத்தப் போகின்றேன் என்று அவளது தாய் அபூர்வாவுக்கும், மருதாணிக்கும் சொல்லியும், அதை உண்மையான தாயாக நல்வழிப்படுத்தாமல், ஆபூர்வா நட்சத்திராவின் எண்ணங்களுக்குத் தூபம் போடுவது உண்மையான தாய்மைக்கு அழகில்லை என்பது தெரிகின்றது.
செறியின் நிலைப்பாடோ, தனக்கு எவ்வளவுதான் கொடுமைகள் நடந்தாலும் தனது அண்ணன் ககனும், பூமியும் கல்யாணம் பண்ணும் மட்டும் எதையும் இழக்கவும் தான் தயாராக இருப்பதாக தீர்மானம் கொண்டுள்ளான். செறியின், அண்ணன் ககனின் மேலுள்ள அன்பானது எவ்வளவு தூய்மையானதும், உண்மையானதும் என்று பெருமைப்பட வேண்டியதாக உள்ளது.
ககனோ மனதினால் உடைந்து விட்டான். ஆனால், தனது உடைவினை வெளியில் காட்டிக் கொள்ளாமல் சந்தோஷமாக இருப்பது போன்று தாய்க்கும், தங்கைக்கும் முன்னால் நடிக்கின்றான். அத்துடன் ககனும், பூமியின் போட்ட ஷோபச்சந்திரா நாட்டிய கலாமன்றத்திற்கு எந்த விதத்திலும் சேரமாட்டேன் என்று தெளிவாக பூமியிடமும், ஷாரதாவிடமும் சொல்லி விட்டான்.
இதற்கு யார் காரணம்?, பூமிதானே! ஒவ்வொரு முறையும் பிரச்சனைகளின் பின்புதான் பூமி காரணங்களைச் சொல்லுகையில் சராசரியான ஒரு மனிதனால் இவற்றினை ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்குமென்பது தெளிவாகின்றது. இதற்கு சரியான உதாரணமாக இருப்பது ககனின் நிலைமைதான்.
மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியாக நடைபெற்ற நிகழ்வுகளை ஒழித்துக் கொண்டிருக்கும் பூமிக்கும், அடுத்தடுத்த நடைபெற்ற வாழ்கைகயின் தடங்கல்களும், ஏமாற்றங்களுக்கும் ஓரளவுதான் பொறுமையும், சகிப்புத்தன்மையும் ஒரு மனிதனுக்கும் இருக்கும். அவனுக்கும் நோவு வரும்தானே! இறுதியாக வந்த நோவானது ககனினால் ஜீரணிக்க முடியாததொன்றாகும். கல்யாண மேடைக்குப் போவதற்கு முன்பு, வீட்டோடு மாப்பிள்ளையாக ககனை வரும்படி கேட்டால், அதுவும், திடீரெனக் கேட்டால், ககனால் என்னதான் சொல்ல முடியும்? செய்ய முடியும்?
இதேபோன்ற கேள்வியினைத்தான் ககனும், பூமியிடம் கேட்டதும். அதாவது, பூமியிடம், தானா, அப்பாவா வேண்டும் என்பது. அதற்காக ககனைப் பூமி பழிக்குப் பழி வாங்குகின்றா என்றில்லை.
ஆனால், இதனை, தனிமையில் ககனைக் கூட்டிக் கொண்டு போய் கதைக்கையிலே பூமி விளங்கப்படுத்தி இருக்க வேண்டும். அப்போது ஏதாவது ஒருமைப்பாடனது உருவாகி இருக்கும். இப்படி பிரச்சனைகளும், மனக்கசப்புகளும், பிரிவுகளும் மனங்களுக்கிடையிலேயும் முளைத்திருக்காமல் பாதுகாத்திருக்கலாம்.
இதனை எவ்வாறு, எவ்வளவு காலத்திற்குத்தான் பூமியாலும், ககனினாலும் இழுத்துக் கொண்டு போக முடியும்?
எமது Reel Review channel லினைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்? உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் பதிவிடுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!