சர்வதேச கரையோர பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு "மெசிடோ" நிறுவனம்  நினைவு கூர்ந்தது.

சர்வதேச கரையோர பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு மெசிடோ நிறுவனம் கரையோர பாதுகாப்பு துறையுடன் இணைந்து கரையோர பாதுகாப்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு கருத்தமர்வை மேற்கொண்டது.

கிளிநொச்சி மாவட்டத்தின் பூனகரி பிரதேச செயலக பிரிவில் பூனகரி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை (20.09.2022) காலை 10 மணி தொடக்கம் பிற்பகல் 3 மணி வரை இடம்பெற்றது.

இவ் விழிப்புணர்வு கருத்தமர்வில் காலநிலை மாற்றம் கரையோர பாதுகாப்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியம், அவற்றில் கண்டல் தாவரங்களின் பங்கு, கரையோர வளங்கள் அழிக்கப்படுவதால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கி இக் கருத்தமர்வு இடம்பெற்றது.

இக்கருத்தமர்வில் வன விரிவாக்கத்துறை உத்தியோகத்தர் என். பிரஷாந்த், கரையோர பாதுகாப்பு துறை உத்தியோகத்தர் ஜே. கேசவன், மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் திரு ஜாட்சன் பிகிறாடோ மற்றும் பணியாளர்கள், மீனவர்கள், மெசிடோ நிறுவனத்தின் மீனவ பெண்கள் குழுக்கள், பூனகரி பிரதேச சமாச நிர்வாகிகள் கரையோர பிரதேச மக்கள் மற்றும் இளையோர்கள் என 50 இக்கும் அதிகமான நபர்கள் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

சர்வதேச கரையோர பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு "மெசிடோ" நிறுவனம்  நினைவு கூர்ந்தது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 12 - 13.03.2026

Mahanadhi - மகாநதி - 12 - 13.03.2026

Read More
Varisu - வாரிசு - 11 - 14.02.2026

Varisu - வாரிசு - 11 - 14.02.2026

Read More
Mahanadhi - மகாநதி - 09 - 11.03.2026

Mahanadhi - மகாநதி - 09 - 11.03.2026

Read More